கோவை- உ.பி. பாலியல் வன்கொடுமை – பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

 

கோவை- உ.பி. பாலியல் வன்கொடுமை – பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை

உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், உண்மை சம்பவங்களை வெளிவரவிடாமல் பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை நிகழ்வதாக, கோவையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை- உ.பி. பாலியல் வன்கொடுமை – பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட தலித் இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலை உறவினர்களிடம் வழங்காமல், காவல்துறையினர் இரவோடு இரவாக எரியூட்டினர்.

கோவை- உ.பி. பாலியல் வன்கொடுமை – பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அதையும் தாண்டி செய்தி எடுக்க சென்ற பெண் ஊடகவியலாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த முயன்றனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பெண் நிருபர் அங்கேயே தங்கி இருந்து செய்தி சேகரிக்க முயற்சி செய்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவை- உ.பி. பாலியல் வன்கொடுமை – பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பில் உ.பி அரசையும் காவல்துறையினரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு ஊடங்களில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை கண்டித்தும் காவல்துறையினரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதி படுத்த வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.