நொய்யல் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு – பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம்

 

நொய்யல் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு – பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம்

கோவை

கோவை அருகே நொய்யல் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி தனியார் மருத்துவமனை ஊழியர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன்புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (31). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர், நேற்று தனது பிறந்தநாளையொட்டி, அதேபகுதியை சேர்ந்த பிரபாகரன் (29), என்பவருடன்

நொய்யல் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு – பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம்

நொய்யல் ஆற்றில் உள்ள சித்திரைச்சாவடி அணைக்கு சென்றுள்ளார். கைகாட்டி பிரிவு பாலத்தின் கீழ் இருவரும் குளித்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வன் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து, தமிழ்செல்வனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரபாகரனும், 20 அடி ஆழ சேற்றில் சிக்கிகொண்டார். நீண்டநேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால்

நொய்யல் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு – பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம்

அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின், இருவரது உடல்களையும் மீட்டனர். இதனை தொடர்ந்து, உடல்களை பிரேத

நொய்யல் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு – பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம்

பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிறந்த நாளில் தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.