கோவை- தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்திவந்த 3 பேர் கைது
Oct 18, 2020, 13:15 IST1603007144000
கோவை
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்திவந்த 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். கோவை – பாலக்காடு சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்
திருமலையம்பாளையம் பாலத்துறை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை தடுத்துநிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியில் இருந்த 3 பேரை பிடித்து, மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, லாரி கேரளா மாநிலம் மணப்புரத்தை சேர்ந்த முனீர் என்பவருக்கு சொந்தமானது என்பதும், மற்றவர்கள் ஊர்க்காவல்
படையை சேர்ந்த செரீப், அனாஸ் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.