ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் கணக்கில்வராத ரூ.85,000 பறிமுதல்
Oct 23, 2020, 11:30 IST1603432846000
கோவை
கோவையில் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினநர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில்வராத ரூ.85 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் திருமலையம் பாளையம் பகுதியில் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 5 மணியளவில்
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.டி.ஓ சோதனை சாவடி அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.85 ஆயிரம் பணம் பறிமுதல்
செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர், அவரது உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் 3 பேரை பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை முடிவில் முழுவிவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.