சிறுமியின் ஆபாச படத்தை பகிர்ந்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை… போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு…

 

சிறுமியின் ஆபாச படத்தை பகிர்ந்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை… போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு…

கோவை

கோவையில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் முகமது சபீர் (21). இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமியின் ஆபாச படத்தை பகிர்ந்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை… போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு…

புகாரின் பேரில், முகமது சபீர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கடந்த 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதில், சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பகிர்ந்த குற்றத்துக்காக முகமது சபீருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனையடுத்து, முகமது சபீர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.