சேர்ந்த வாழ மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து – கணவர் கைது

 

சேர்ந்த வாழ மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து – கணவர் கைது

கோவை

கோவையில் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்போடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜயசங்கர். இவருக்கு ரஞ்சிதா (25) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

சேர்ந்த வாழ மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து – கணவர் கைது

ரஞ்சிதா காந்திபுரத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயசங்கர் மதுஅருந்தி விட்டுவந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டதால், ரஞ்சிதா குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதாவின் வீட்டிற்கு சென்ற விஜயசங்கர், அவரை தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்துள்ளார்.

சேர்ந்த வாழ மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து – கணவர் கைது

இதற்கு ரஞ்சிதா மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த விஜய்சங்கர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சிதாவின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். உறவினர்கள் அவரை மீட்டு கோவை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், விஜய்சங்கரை கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.