கோவை- வீட்டில் தனியாக இருந்த முதியவர் வெட்டிக்கொலை – நகை, பணம், கார் கொள்ளை !

 

கோவை- வீட்டில் தனியாக இருந்த முதியவர் வெட்டிக்கொலை – நகை, பணம், கார் கொள்ளை !

கோவை

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சாரதா மற்றும் மகன் பார்த்தசாரதி ஆகியோர் உயிரிழந்துவிட்ட நிலையில், இவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

கோவை- வீட்டில் தனியாக இருந்த முதியவர் வெட்டிக்கொலை – நகை, பணம், கார் கொள்ளை !

இவரது மகள், வெளிநாட்டில் இருக்கும் நிலையில், கோவையில் இருக்கும் சொத்துகளை கிருஷ்ணமூர்த்தி நிர்வகித்து வந்துள்ளார். தற்போது, கொரோனா அச்சம் காரணமாக வேலையாட்களையும் நிறுத்திவிட்டு வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் கிருஷ்ணமூர்த்தி வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இது குறித்து, தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார், வீட்டிற்கு சென்று பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி சேரில் அமர்ந்தபடி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். பக்கத்து அறைகளில் ரத்தக் கறைகள் இருந்ததும் தெரியவந்தது.

கோவை- வீட்டில் தனியாக இருந்த முதியவர் வெட்டிக்கொலை – நகை, பணம், கார் கொள்ளை !

போலீஸ் முதல்கட்ட விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி தனியாக இருப்பதை நோட்டமிட்ட சிலர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்துள்ளது. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கோவை- வீட்டில் தனியாக இருந்த முதியவர் வெட்டிக்கொலை – நகை, பணம், கார் கொள்ளை !

நேற்று முன்தினம் கெம்பட்டி காலனி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி என்ற 62 வயது பெண்ணை கொலை செய்து, அவரது வீட்டில் இருந்து 80 சவரன் தங்கநகை, ரூ.3.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வரும் நிலையில் , அதே பாணியில் மீண்டும் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. .