ஒற்றை சாதி சான்றிதழ் வழங்கக் கோரி,தேனியில் சவப்பெட்டி ஏந்தி ஊர்வலம்

 

ஒற்றை சாதி சான்றிதழ் வழங்கக் கோரி,தேனியில் சவப்பெட்டி ஏந்தி ஊர்வலம்

தேனி

சீர்மரபினர் சமூக மக்களுக்கு ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தேனியில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி சப்பெட்டியுடன் பேரணி சென்றவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

தமிழகத்தில் கள்ளர், மறவர் உள்ளிட்ட 68 உட்பிரிவுகளை உள்ளடக்கிய சீர்மரபினர் சமூக மக்கள், தங்களுக்கு வழங்கப்படும் இரட்டை சான்றிதழ் முறையை ரத்துசெய்து, டி.என்.டி என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், டி.என்.டி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் சீர்மரபினர் சமூக மக்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒற்றை சாதி சான்றிதழ் வழங்கக் கோரி,தேனியில் சவப்பெட்டி ஏந்தி ஊர்வலம்

போராட்டக்காரர்களில் பலரது உடல்நலை மோசமடைந்து வருவதாகவும், அதனை அரசுக்கு சுட்டிக்காட்டும் விதமாகவும் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சவப்பெட்டியுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சீர்மரபினர் முயற்சி செய்தனர். இதற்காக தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் சவப்பெட்டி உடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை கைதுசெய்தனர்.