தேங்காய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை!

 

தேங்காய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை!

தென்காசி

தென்காசி அருகே தேங்காய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்ச ருபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த அருணாப்பேரி பகுதியை சேர்ந்தவர் பூமணி (61). தேங்காய் வியாபாரி. இவர் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று அதிகாலை குடும்பத்துடன் மதுரைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்றிரவு வீட்டிற்கு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

தேங்காய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை!

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூமணி அளித்த தகவலின் பேரில் பாவூர் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, பூமணி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.