30 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் ‘கோகோ கோலா’ விளம்பரம் நிறுத்தம்
அட்லாண்டா: 30 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் ‘கோகோ கோலா’ விளம்பரங்களை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகளாவிய விளம்பரங்களில் ஒரு முக்கிய சக்தியாக இருக்கும் கோகோ கோலா, சமூக ஊடகங்களில் 30 நாட்களுக்கு விளம்பரங்களை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. ஏனெனில் சமூக வலைதளங்கள் இனவெறி உள்ளடக்கத்தை எவ்வாறு கையாளுகின்றன என்பதைக் கணக்கிடுகின்றன.
“உலகில் இனவெறிக்கு இடமில்லை, சமூக ஊடகங்களில் இனவெறிக்கு இடமில்லை” என்று கோகோ கோலா நிறுவனத்தின் தலைவரும் , லைமை நிர்வாக அதிகாரியுமான ஜேம்ஸ் குவின்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இடைவெளியை பயன்படுத்தி கோகோ கோலா விளம்பரங்களில் திருத்தங்கள் தேவையா என்பதைத் தீர்மானிக்க விளம்பரக் கொள்கைகளை மறு மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும் என்று க்வின்சி கூறியுள்ளார்.
#StopHateForProfit ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பேஸ்புக்கில் விளம்பரங்களை நிறுத்துமாறு ‘நிறமான மக்களின் முன்னேற்ற தேசிய சங்கம்’ (NAACP) தனது கூட்டணி நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது.