சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக : முதல்வர் பேச்சு!

 

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக : முதல்வர் பேச்சு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி, தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு கோவை பச்சாபாளையத்தில் 123 ஜோடிகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது. முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக : முதல்வர் பேச்சு!

புதுமணத் தம்பதிகளுக்கு அதிமுக சார்பில் 73 வகையான சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டது. அதோடு, திருமணத்திற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக; நமக்கு சாதி மதம் பேதமில்லை. காற்றில் பறக்க விடும் வாக்குறுதிகள் கொடுப்பது திமுக தான். ஏழை மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் ஜெயலலிதா என்று கூறினார்.

மேலும் திருமண உதவி திட்டத்தின் கீழ் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக தெரிவித்த முதல்வர், மணமக்களுக்கு சீர் வரிசை கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான் என பெருமிதம் தெரிவித்தார்.