மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண உதவி!

 

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண உதவி!

நிவர் புயலை தொடர்ந்து தென் வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கடலூர், நாகை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றது. ஏற்கனவே நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கடலூரில் அதன் தாக்கம் குறைவதற்குள், அடுத்த புயல் தாக்கியதால் கடலூர் மாவட்டமே வெள்ளக் காடாக மாறியது. வீடுகளில் மழை நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண உதவி!

கடலூரில் மழை பாதிப்படைந்த பகுதிகளை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, இன்று நாகை மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில், நாகையில் பழங்கள்ளி கிராமத்தில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதல்வர் நிவாரண உதவி வழங்கினார். மேலும், மழையால் வீடுகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்.