தமிழக முழுவதும் முழு பொதுமுடக்கமா?.. ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை!

 

தமிழக முழுவதும் முழு பொதுமுடக்கமா?.. ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போது, கொரோனா பரவல் குறைவாக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதனை கருத்தில் கொண்ட அரசு, ஊரடங்கைக் கட்டுப்பாடுகளுடன் ஓரளவு தளர்த்தியது. அதனால் நாளொன்றுக்கு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த பாதிப்பு, பன்மடங்காக அதிகரித்தது. இதனையடுத்து கொரோனா அதிகமாகப் பரவியுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதுரையில் ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், இன்று மாலை முதல் தேனியிலும் ஊரடங்கு அமல் படுத்த உள்ளது.

தமிழக முழுவதும் முழு பொதுமுடக்கமா?.. ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை!

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவது குறித்தும் மாவட்ட வாரியான கொரோனா பரவல் மற்றும் சிகிச்சை நிலவரம் குறித்தும் ஊரடங்கு அமல்படுத்தினால் எந்தெந்த கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.