தாய்மாமன் மறைவு – முதலமைச்சர் நேரில் அஞ்சலி

 

தாய்மாமன் மறைவு – முதலமைச்சர் நேரில் அஞ்சலி

ஈரோடு

ஈரோட்டில் மறைந்த தனது தாய்மாமனின் இல்லத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மைக்கேல் பாளையத்தை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் சூளைராஜா. இவரது தகப்பனார் கருப்பகவுண்டர், நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். கருப்பகவுண்டர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

தாய்மாமன் மறைவு – முதலமைச்சர் நேரில் அஞ்சலி

இந்த நிலையில், இன்று காலை மைகேல் பாளையம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த கருப்ப கவுணடரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்நது, சூளைராஜா குடும்பத்தாருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.