தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது! பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் வாழ்த்து!

 

தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது! பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பஞ்சாப் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த பன்வாரிலால் புரோகித், அம்மாநிலத்தின் முழுநேர ஆளுநராக நீடிப்பார் என குடியரசு தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது! பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் வாழ்த்து!

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு வாழ்த்து…

தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்!

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் – முதலமைச்சராக ஆனபோதும் தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் புரோகித் அவர்கள். குறுகிய காலம் பழகி இருந்தாலும் இனிமையான மறக்க முடியாததாக உங்கள் நட்பு அமைந்திருந்தது.

உங்களது பரந்த உள்ளம் பஞ்சாப் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையட்டும்.

தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.