முதல்வரான பிறகு… முதல்முறையாக மோடியை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்!

 

முதல்வரான பிறகு… முதல்முறையாக மோடியை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்!

வரும் 17ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக டெல்லி சிறப்பு பிரதிநிதி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு, முதன் முறையாக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியிருந்தார். இந்த நிலையில் , வரும் 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.கே.எஸ் விஜயன் தெரிவித்தார்.

முதல்வரான பிறகு… முதல்முறையாக மோடியை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்!

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஏ.கே.எஸ் விஜயன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் முக ஸ்டாலின் நாளை மறுநாள் காலை தனி விமானத்தில் டெல்லி செல்வதாகவும் காலை 10:30 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். கருப்பு பூஞ்சை மருந்து, தடுப்பூசி, நீட் தேர்வு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளதாக தெரிகிறது.

17-ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் 18 ஆம் தேதி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் எம்.பி ராகுல் காந்தியையும் சந்திக்கவுள்ளார் என்றும் ஏ.கே.எஸ் விஜயன் தெரிவித்தார்.