சென்னையில் மேலும் ஒரு தடுப்பூசி மையம்… தொடக்கி வைத்தார் முதல்வர்!

 

சென்னையில் மேலும் ஒரு தடுப்பூசி மையம்… தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தமாறு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தது. அத ன்படி ஆங்காங்கே தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டு மக்களுக்கு தடுப்பு செலுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலேயே சென்று தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் ஒரு தடுப்பூசி மையம்… தொடக்கி வைத்தார் முதல்வர்!

அந்த வகையில், சென்னை பிராட்வே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அந்த முகாமில் முதற்கட்டமாக 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பு செலுத்தி கொள்ள முன்வரவேண்டும் என அப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி மையம் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 படுக்கைகள், 14 செவிலியர்கள் மற்றும் 8 மருத்துவர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மையம் தொடக்க நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனால், 5 கோடி தடுப்பூசிக்கு தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.