கடுமையாக்கப்படுமா கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை!

 

கடுமையாக்கப்படுமா கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது. கூடுதல் தளர்வுகளை அளிக்க திட்டமிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், திடீரென பாதிப்பு அதிகரித்தால் கூடுதல் தளர்வுகளை அளிக்காமல் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6மணி வரை ஊரடங்கை நீடித்து விட்டார். அதோடு, பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கையை கையாளவும் அனுமதி அளித்தார்.

கடுமையாக்கப்படுமா கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை!

அதன் படி, சென்னையில் தி.நகர் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அதே போல கோவை, திருப்பூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டன்களிலும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அக்கூட்டத்தில் பாதிப்பு அதிகரிக்கும் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாடு கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.