“அவரு சேகர் பாபு இல்ல.. செயல் பாபு” – அமைச்சரை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!

 

“அவரு சேகர் பாபு இல்ல.. செயல் பாபு” – அமைச்சரை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!

அமைச்சர் சேகர் பாபு செயல் பாபுவாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சேகர் பாபு என்று அழைப்பதைவிட செயல் பாபு என்று அழைப்பது சிறப்பாக இருக்கும். எண் என்று சொல்வதற்கு முன்னால் எண்ணெயாக விரைந்து வேலை செய்கிறார். 24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக செயல்படுகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

“அவரு சேகர் பாபு இல்ல.. செயல் பாபு” – அமைச்சரை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!

தொடர்ந்து பேசிய முதல்வர், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத்தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான். கோவில் நிலங்களும் சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். அமைச்சர்களையும். அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன் என்றும் தெரிவித்தார்.