வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு… முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்!

 

வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு… முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்!

கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படுமா என வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலளித்தார்.

தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசு முதன்முறையாக கடந்த 13ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மறுநாள் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பொது பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு… முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்!

பட்ஜெட் மீது மூன்றாவது நாளாக இன்று நடைபெற்ற விவாதத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசின் நிதியுடன் தான் செயல்படுத்த முடியும். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடியை சந்தித்த போது மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வலியுறுத்தினேன். அதனடிப்படையில் அனுமதி கிடைத்திருக்கிறது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். அறிவிக்கப்பட்ட இடங்களில் நிச்சயம் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.