எடப்பாடியில் கடைசி நாள் பிரச்சாரம்.. ஈபிஎஸ் உருக்கம்!

 

எடப்பாடியில் கடைசி நாள் பிரச்சாரம்.. ஈபிஎஸ் உருக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இன்றோடு நிறைவடைகின்றன. முதல்வர் வேட்பாளர்கள் எல்லாரும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரத்தை முடிக்கவுள்ளனர். மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும் கமல்ஹாசன் கோவை தெற்கிலும் சீமான் திருவொற்றியூரிலும் டிடிவி தினகரன் கோவில்பட்டியிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றனர்.

எடப்பாடியில் கடைசி நாள் பிரச்சாரம்.. ஈபிஎஸ் உருக்கம்!

அந்த வகையில், முதல்வர் பழனிசாமி இன்று எடப்பாடி தொகுதியில் உள்ள வனவாசியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2011 மற்றும் 2016ம் ஆண்டு தேர்தல்களில் என்னை ஜெயிக்க வைத்தீர்கள். ஒவ்வொரு முறையும் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. முதல்வர் போட்டியிடும் தொகுதி என்ற பெருமை எடப்பாடிக்கு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் நீங்கள் தான். ஒரு போதும் எடப்பாடி மக்களை மறக்க மாட்டேன் என்று உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், இத்தனை முறை எனக்கு ஆதரவு அளித்த நீங்கள் இந்த முறையும் ஆதரவு அளிக்க வேண்டும். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். சொந்த மண்ணில் பிரச்சாரம் செய்வது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.