கொரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதல்வர்

 

கொரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதல்வர்

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 20 ஆண்டுகள் ஊடகத் துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா தொற்று காலத்திலும் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவரது மரணத்திற்கு பிரபல ஊடகங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றன.

கொரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதல்வர்

இந்நிலையில், ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் ஊடக நண்பர்கள் செய்தி சேகரிக்க செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டுமென அனைவருக்கும் முதல்வர் அறிவுறித்தியுள்ளார்.