சத்தியமங்கலத்தில் நாளை முதல்வர் பழனிசாமி பரப்புரை: ஏற்பாடுகள் தீவிரம்!

 

சத்தியமங்கலத்தில் நாளை முதல்வர் பழனிசாமி பரப்புரை: ஏற்பாடுகள் தீவிரம்!

சத்தியமங்கலத்தில் நாளை முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்ளவிருப்பதால் அங்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி களப்பணியில் அதிரடியாக களமிறங்கிவிட்டது. ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும், இரண்டு மாதத்தில் ஆட்சி கவிழும் என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக 3 ஆண்டுகளாக திறம்பட தமிழகத்தை வழி நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

சத்தியமங்கலத்தில் நாளை முதல்வர் பழனிசாமி பரப்புரை: ஏற்பாடுகள் தீவிரம்!

கட்சிக்குள்ளே பல உட்பூசல்கள் இருப்பினும், மக்கள் பாதிக்காத வண்ணம் முடிவுகளை எடுத்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மாவட்ட வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நாளை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

சத்தியமங்கலத்தில் நாளை முதல்வர் பழனிசாமி பரப்புரை: ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை மாலை 4 மணிக்கு எஸ்.பி.எஸ் கார்னரில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடியாக உரையாற்றவிருக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி அப்பகுதி முழுவதும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேனர்கள் வைப்பது, கட்சிக் கொடிகள் கட்டுவது என அதிமுகவினர் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.