அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

 

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

அ.தி.மு.க. அவைத்தலைவராக இருப்பவர் மதுசூதனன். நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வட சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். இதனால் அவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் கடந்த மே 29 ஆம் தேதி திடீரென மதுசூதனனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

இதையடுத்து மதுசூதனன் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ‘ஆஞ்சியோகிராம்’ செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார். தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வரும் மதுசூதனனை தமிழக முதல்வர் எடப்பாடி k.பழனிச்சாமி அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பழங்களை வழங்கி உடல் நலம் பெற நலம் விசாரிச்சார்.