“பிரியாணி , புரோட்டா சாப்பிட்டு திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள்” – முதல்வர் பழனிசாமி கிண்டல்!!!

 

“பிரியாணி , புரோட்டா சாப்பிட்டு திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள்” – முதல்வர் பழனிசாமி கிண்டல்!!!

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் இன்னும் 16 நாட்களில் நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

“பிரியாணி , புரோட்டா சாப்பிட்டு திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள்” – முதல்வர் பழனிசாமி கிண்டல்!!!

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சியை தனி மாவட்டம் ஆக்கியது அதிமுக அரசுதான் . புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியோடு அரசு மருத்துவமனையும் கொண்டு வரப்பட வுள்ளது.ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கள்ளக்குறிச்சி அருகே செயல்பட்டு வருகிறது. அடிக்கல் நாட்டுவதுடன் திட்டங்களை துவக்கி வைக்கும் அரசாகவும் அதிமுக அரசு உள்ளது .மக்களை குழப்பி எப்படியாவது வெற்றி பெறலாம் என தவறான வழியில் செல்கிறார் ஸ்டாலின்” என்றார்.

“பிரியாணி , புரோட்டா சாப்பிட்டு திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள்” – முதல்வர் பழனிசாமி கிண்டல்!!!

தொடர்ந்து பேசிய அவர், “பிரியாணி புரோட்டா சாப்பிட்டு திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள். ஓட்டல்களில் பிரியாணி, பரோட்டா சாப்பிட்டு காசு தராமல் திமுகவினர் சென்றுவிடுவார்கள் . 10 ஆண்டு ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் திமுகவினர் கோரப்பிடியில் உள்ளனர் ” என்றார்.