29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

 

29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் செப்.29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 7ஆவது முறையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடந்த மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனால் கடந்த மாதம் 28ம் தேதி மருத்துவக்குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், செப்.30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டார். வழக்கமாக அளிக்கப்பட்ட தளர்வுகளை விட, இந்த முறை மால்கள், பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்கள், உள்ளிட்ட பல சேவைகளுக்கு முதல்வர் அனுமதி அளித்தார். அதனால் தற்போது தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்த நிலையில் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, 29ம் தேதியன்றே மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு மற்றும் தளர்வுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.