திருச்சி காந்தி மார்கெட் உள்ளிட்ட தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள மார்கெட்டுகளை திறக்க வேண்டும் – விக்கிரமராஜா வலியுறுத்தல்

 

திருச்சி காந்தி மார்கெட் உள்ளிட்ட தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள மார்கெட்டுகளை திறக்க வேண்டும் – விக்கிரமராஜா வலியுறுத்தல்

திருச்சி

திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்கெட்டுகளையும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார்.

திருச்சி காந்தி மார்கெட் உள்ளிட்ட தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள மார்கெட்டுகளை திறக்க வேண்டும் – விக்கிரமராஜா வலியுறுத்தல்
காந்தி மார்க்கெட் ஆலோசனை கூட்டம்

திருச்சியில், காந்தி மார்க்கெட் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

திருச்சி காந்தி மார்கெட் உள்ளிட்ட தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள மார்கெட்டுகளை திறக்க வேண்டும் – விக்கிரமராஜா வலியுறுத்தல்
ஆலோசனை கூட்டம்

கோயம்பேடு மார்கெட் வரும் 18 ஆம் தேதி முதல் படிப்படியாக திறக்கப்பட உள்ளதாவும், அதே போல தமிழ்நாட்டில் மூடப்பட்டிருக்கும் திருச்சி காந்தி மார்கெட் உள்ளிட்ட அனைத்து மார்கெட்டுகளையும் திறக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரை வரும் 2 ஆம் தேதி சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா தொற்றால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

திருச்சி காந்தி மார்கெட் உள்ளிட்ட தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள மார்கெட்டுகளை திறக்க வேண்டும் – விக்கிரமராஜா வலியுறுத்தல்
விக்கிரமராஜா


திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அந்த மார்க்கெட் நிரந்தரமாக மூடப்படுமா என்கிற கேள்விக்கு, காந்தி மார்க்கெட் திறக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாவும் விக்கிரமராஜா தெரிவித்தார்.