மசூதிக்கு சென்ற சிறுமி -மோகம் கொண்ட மதகுரு -கேமராவில் சிக்கிய கேவலமான காட்சிகள்

 

மசூதிக்கு சென்ற சிறுமி -மோகம் கொண்ட மதகுரு -கேமராவில் சிக்கிய கேவலமான காட்சிகள்

தண்ணீர் பிடிக்க மசூதிக்கு சென்ற சிறுமியை, அங்கிருந்த மதகுரு பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

மசூதிக்கு சென்ற சிறுமி -மோகம் கொண்ட மதகுரு -கேமராவில் சிக்கிய கேவலமான காட்சிகள்


வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு மசூதியில் ,48 வயதான ஒருவர் மதகுருவாக இருந்தார் . ராஜஸ்தானில் உள்ள பரத்பூரைச் சேர்ந்த இவர் திருமணமானவர்.இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் காஜியாபாத்தின் லோனியில் வசிப்பவர்.இந்நிலையில் அந்த மசூதிக்கு அருகிலுள்ள குடியிருப்பிலிருந்து 12 வயதான பெண் அடிக்கடி தண்ணீர் பிடிக்க செல்வார் .
அப்போது அந்த சிறுமியை அந்த மதகுரு ரகசியமாக நோட்டமிட்டு வந்துள்ளார் .இதனால் அந்த சிறுமியை அவர் அடைய திட்டமிட்டார் .இதன் விளைவாக அதற்கான சரியான சந்தர்ப்பத்த்தை எதிர் நோக்கி காத்திருந்தார் .அதன் படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அந்த சிறுமி அந்த மசூதிக்கு தண்ணீர் பிடிக்க சென்றார் .அப்போது அந்த மதகுரு அந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டார் .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அங்கிருந்து ஓடி வந்து, அந்த சம்பவம் பற்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .போலீசார் அந்த மசூதியிலிருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது அந்த மதகுரு குற்றம் உறுதியானது .பிறகு மதகுரு மீது பலாத்கார வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .பிறகு அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய வைக்கப்பட்டார் .இந்த சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலானது .அதை பார்த்த பலர் கடுமையாக கண்டித்தனர் .