ஓசூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் – வடமாநில தொழிலாளர்கள் இருவர் வெட்டிக்கொலை

 

ஓசூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் – வடமாநில தொழிலாளர்கள் இருவர் வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் வெட்டிகொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள நஞ்சப்புரம் கிராமத்தில் வடாமநில கூலி தொழிலாளர்கள் தங்கி, பணிபுரிந்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன், வடமாநில தொழிலாளர்களுக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஓசூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் – வடமாநில தொழிலாளர்கள் இருவர் வெட்டிக்கொலை

இதன் தொடர்ச்சியாக, நேற்று இரு தரப்பினரும் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இதில், வடமாநிலத்தை சேர்ந்த பிஜேஷ், பிர்ஜேசிங் ஆகிய இருவர் வெட்டிகொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஓசூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பரபரப்பை ஏற்படுததிய இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.