சென்னையில் 24 மணிநேரமும் மாநகர பேருந்துகள் ஓடும்!

 

சென்னையில் 24 மணிநேரமும் மாநகர பேருந்துகள் ஓடும்!

இன்றுமுதல் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சென்னையில் 24 மணிநேரமும் மாநகர பேருந்துகள் ஓடும்!

வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை வருகிறது. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தமிழகம் முழுவதும் சிறப்பு அரசு பேருந்துகளுக்கான சேவை தொடங்கியது.இதில் சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் என இன்று 2,226 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையிலிருந்து ஜன.13 வரை வெளியூர்களுக்கு 3 நாள்களுக்கு 10,228 பேருந்துகளும், ஜன.17 முதல் 19ஆம் தேதி வரை 9,120 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சென்னையில் 24 மணிநேரமும் மாநகர பேருந்துகள் ஓடும்!

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜனவரி 13-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். இன்றிலிருந்து நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் கூடுதலாக 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.