“தமிழன் பிரசன்னாவை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்”: காயத்ரி ரகுராம் ஆவேசம்!

 

“தமிழன் பிரசன்னாவை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்”: காயத்ரி ரகுராம் ஆவேசம்!

இவர் சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசி பலரின் கண்டனத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார். 

திமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரசன்னா.  இவர் தனது பெயருக்கு முன்னாள் தமிழன் என்ற பட்டத்தை சேர்த்து கொண்டதால் தமிழன் பிரசன்னா என்று அழைக்கப்படுகிறார்.  மிகவும் துடிப்புடன் திராவிட இயக்க கொள்கைகளை தொலைக்காட்சி விவாதங்களில் பேச கூடிய இவர் சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசி பலரின் கண்டனத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார். 

இந்நிலையில்  நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், ” திமுக பிரசன்னா பேச்சு சுதந்திரமா? அல்லது  அரசியலமைப்பிற்கு எதிரானதா? அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? திமுக பிரசன்னா பேச்சு  ஒரு பயங்கரவாதம் . 

rr

எப்படி அப்பாவி மக்களை மூளை சலவை செய்கிறது என்பதைப் போன்றது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும், அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். நடவடிக்கை எடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.