ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இரண்டாவது படத்திற்கான அறிவிப்பு வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்!

 

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இரண்டாவது படத்திற்கான அறிவிப்பு வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்!

ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை: ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இசையமைப்பாளராக திரை உலகிற்குள் அறிமுகமானவர் ஹிப் ஹாப் தமிழா என்கிற ஆதி. பின்னர், எழுத்து, இயக்கம், இசை, வசனம், நடிப்பு என அனைத்தும் ஹிப் ஹாப் ஆதியின் படைப்பாக மீசைய முறுக்கு திரைப்படம் வெளியாகியது.

திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக அப்படம் ஓடியது. ஆனால், அடுத்த படத்திற்கான அறிவிப்பை ஹிப் ஹாப் ஆதி வெளியிடாமல் இருந்தார்.

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் இரண்டாவது படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் போஸ்டர் வருகின்ற நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பையடுத்து, அவரது ரசிகர்கள் பெருமளவில் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும், மீசைய முறுக்கு படத்தை தயாரித்திருந்த இயக்குநர் சுந்தர்.சி தான் இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.