ஸ்ரீ ரெட்டி மீது வழக்குப்பதிவு! கைதாக வாய்ப்பு என தகவல்

 

ஸ்ரீ ரெட்டி மீது வழக்குப்பதிவு! கைதாக வாய்ப்பு என தகவல்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவர் தனது புகாரை எடுக்கக்கோரி நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவர் தனது புகாரை எடுக்கக்கோரி நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டார். பின்னர் தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கம் மூலம் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம் சிறிதுகாலம் அடங்கியிருந்த நேரத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. 

ஸ்ரீ ரெட்டி

குணச்சித்திர நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகின்றனர் என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் தெலங்கானா மாநில சைபர் கிரைம் போலீசாரிடம் ஸ்ரீ ரெட்டி மீது புகர் அளித்துள்ளனர். புகாரில் எங்கள் மீது ஸ்ரீ ரெட்டி கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டிருக்கின்றனர். இதனால் ஸ்ரீ ரெட்டி மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபலங்கள் மீது ஆதாரம் இல்லாம அவதூறு பரப்பிவரும் ஸ்ரீ ரெட்டி கைதாகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.