வெப் சீரிஸில் களமிறங்கும் வரலக்ஷ்மி!
நடிகை வரலக்ஷ்மி தெலுங்கு வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகை வரலக்ஷ்மி தெலுங்கு வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான வரலக்ஷ்மி சரத்குமார், அப்பாவின் சிபாரிசு இல்லாமலேயே தனது திறமையினால் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளார். ஹீரோயின் என்பதால், ஹீரோவுடன் டூயட் பாடவது, அழுவது, சிரிப்பது என்று இல்லாமல், சவாலான, வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று கேரட்கர் ஆர்ட்டிஸ்டாக மக்கள் மனதை கவர்ந்தார்.
அதன் அடுத்தக்கட்டமாக துணிச்சலுடன் வில்லி கதாபாத்திரங்களை ஏற்று முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இதனிடையே, தொலைக்காட்சி பக்கம் திரும்பிய வரலக்ஷ்மி, ஜெயா டிவியில் சமூக அக்கறை கொண்ட விவாத நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.
Doing my first web series for my myillllleeeeee @Actor_Krishna directed by my first female director @pushpaignatius wooohooo @ZEE5India #highpriestess that too in Telugu…super fun… pic.twitter.com/zP4v9rx98P
— varu sarathkumar (@varusarath) December 10, 2018
இதுமட்டும் அல்லாமல் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இப்படி பல விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் வரலக்ஷ்மி, தற்போது இளைஞர்களை பெரிதும் ஈர்க்கும் வென் சீரிஸை டார்கெட் செய்துள்ளார்.
‘கழுகு’ நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதாக வரலக்ஷ்மி அறிவித்துள்ளார். இந்த சீரிஸை புஷ்பா என்பவர் இயக்கப்போவதாகவும் வரலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.