விஸ்வாசம் வந்தே 26 நாள் தான் ஆகுது,அதுக்குள்ள 50-வது நாளை கொண்டாட காத்திருக்கும் பிரபல திரையரங்கம்!
விஸ்வாசம் திரைப்படத்தின் 50 வது நாளை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் கூடுதல் காட்சி திரையிடவுள்ளதாக அத்திரையரங்கம் தெரிவித்துள்ளனர்
சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தின் 50 வது நாளை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் கூடுதல் காட்சி திரையிடவுள்ளதாக அத்திரையரங்கம் தெரிவித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. படம் வெளியாகி 29 நாள் கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு வருகிறது.
Get ready #Thala fans #Viswasam Blockbuster 50th Day celebrations at @RohiniSilverScr on Feb 28th.
Bookings open today by 6.30 PM! #Viswasam50AtRohini pic.twitter.com/3DAhRI0rCt
— Rohini SilverScreens (@RohiniSilverScr) February 4, 2019
இந்நிலையில் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 26 நாள் கடந்த நிலையில் இந்த படத்தின் 50 வது குறித்து சென்னையில் உள்ள பிரபல திரையரங்குளில் ஒன்றான ரோகிணி திரையரங்கம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது விஸ்வாசம் திரைப்படத்தின் 50 வது நாளில் ரோகிணி திரையரங்கத்தில் உள்ள 6 திரையிலும் விஸ்வாசம் திரைப்படத்தை திரையிட அந்நிறுவனம் முடிவு செய்து உள்ளனர்.மேலும் விஸ்வாசம் படத்தின் 50 வது நாளுக்கான டிக்கட் விற்பனை இப்போதே சூடு பிடித்துவிட்டதாகத் தெரிவித்துவருகின்றனர்.