விஷ்ணுவால் தடைப்பட்டு போன படப்பிடிப்பு!
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு நடக்காமல் தடைப்பட்டுள்ளது
சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு நடக்காமல் தடைப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை பிரிந்திருந்தாலும் தனது மகனை அவ்வப்போது சந்நித்துப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் அவருடைய மகனார்யன் பிறந்த நாளன்று வித விதமான பொம்மைகளுடன் மகனை சந்தித்து பாச முத்தங்களை பரிசளித்திருக்கிறார்.
so much of difficulty holding and kissin him on his bday jan 31st …but i guess dats d father-son bond 🙂 #aryan is growin up fast n im recoverin real slow :):) pic.twitter.com/s6rvXPY1I7
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) February 2, 2019
இவர் நடித்து வரும் பெயர் வைக்காத புதிய படம் கேரளா பின்னணியில் கதை நடப்பதாக இருப்பதால் கடந்த ஒரு மாதமாக கேரளாவில் நடந்த படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வந்தார். அந்த நேரத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்த போது எதிர்பாராத விதமாக கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனியில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், “என் மகன் வேகமாக வளர்ந்து வருகிறான் ஆனால் என் காயம்தான் மெதுவாக குணம்டைகிறது” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் .