விடிய விடிய அஜித் படம்: பிரபல திரையரங்கு உரிமையாளரின் பதிவால் குஷியான தல ரசிகர்கள்!
தமிழக அரசு சமீபத்தில் 24 மணி நேரமும் திரையரங்குகள் மற்றும் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பிற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலத்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தமிழக அரசு சமீபத்தில் 24 மணி நேரமும் திரையரங்குகள் மற்றும் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பிற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலத்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது என்றால் அப்படத்திற்குத் திங்கட்கிழமையே மக்கள் வருவதில்லை. நார்மல் காட்சிகளுக்கே இந்த நிலை என்றால் விடிய விடிய திரையரங்கங்கள் இயங்குவது எப்படிச் சாத்தியமாகும்? என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் மாஸ் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் படங்கள் ரிலீஸாகும் போது இனிமேல் அதிகாலை காட்சிக்கு ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலையில் இதன் முலம் ஏற்படாது என்றே கருதப்படுகிறது.
When 24hrs screening of movies goes live in TN, the first worthy film for this format will be #Thala ‘s #NerkondaPaarvai … Sleepless nights guaranteed for all exhibitors … #BringItOn @nerkondapaarvai pic.twitter.com/uCdvXEuPso
— Rakesh Gowthaman (@VettriTheatres) June 7, 2019
இந்த நிலையில் சென்னையின் முன்னணி திரையரங்குகளில் ஒன்றான வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ’24 மணி நேரமும் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து தல அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தை விடிய விடிய திரையிடத் திட்டமிட்டுள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவைப் பார்த்த தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.