விஜய் சேதுபதி, தனுஷ் படங்களுக்கு தடை இல்லை! விநியோக நிறுவனம் விளக்கம்

 

விஜய் சேதுபதி, தனுஷ் படங்களுக்கு தடை இல்லை! விநியோக நிறுவனம் விளக்கம்

தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு விதித்திருந்த தடைகள் தற்போது நீட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படியுள்ளது. 

சென்னை: தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு விதித்திருந்த தடைகள் தற்போது நீட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதியின் சிந்துபாத், தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களைத் தமிழில் வெளியிட கே புரொடக்ஷன் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பாகுபலி திரைப்படத்தைத் தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும்.

பாகுபலி திரைப்படம் வெளியான சமயத்தில் ரூ.17.60 கோடி பணத்தை படத்தின் தர வேண்டும் என்றும், தரும் வரை இரு படங்களையும் வெளியிட தடைகேட்டு அந்நிறுவனம் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில், கே புரொடக்ஷன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தது. 

தற்போது அதை கே.புரொடக்ஷன் நிறுவனம் மறுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில்  ‘அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் எங்களுக்கு, தீங்கு இழைக்கும் நோக்கில் கே புரொடக்ஷன் மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.

அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் எங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் 04.05.2019 அன்று ஐதராபாத் நகர சிவில் நீதிமன்ற 24 வது கூடுதல் தலைமை நீதிபதி மற்றும் வணிக நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது. நாங்கள் அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு எந்த வித பணமும் செலுத்த தேவையில்லை.

அவர்கள் தான் எங்கள் நிறுவனத்திற்குப் பல கோடிகள் தர வேண்டியுள்ளது. நாங்கள் சட்ட ரீதியாக எங்கள் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதன் மூலமாக அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தவறான செய்தியை யாரும் பின்பற்ற வேண்டாம்’. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.