வண்டலூரில் புலி தாக்குதல்…அஜித் மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி!

 

வண்டலூரில் புலி தாக்குதல்…அஜித் மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி!

அஜித் குறித்து செய்தி வெளியாவதை  விட அவரது குடும்பம் குறித்து தான் சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகிறது

அஜித் குறித்து செய்தி வெளியாவதை  விட அவரது குடும்பம் குறித்து தான் சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதேபோல் இவர்களின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ttn

இந்நிலையில் நேற்று வண்டலூர் பூங்காவில் காலை  பராமரிப்பாளர் விஜயா புலியை கூண்டின் வழியாக கையைவிட்டு லேசாக தடவிக்கொடுக்க, கடுப்பான புலி விஜயாவின் கையை கடித்து குதறியது.

 

இதையடுத்து ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவத்தின் போது அஜித்தின் மனைவி ஷாலினி தனது  குழந்தைகள் அனோஸ்கா மற்றும் ஆத்விக்குடன்  அங்கு தான் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தைக் கொஞ்சமும் எதிர்பாராத ஷாலினி, உடனடியாக குழந்தைகளை அங்கிருந்து அழைத்து கொண்டு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.