வடிவேலுவின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக திரளும் இயக்குநர்கள்!

 

வடிவேலுவின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக திரளும் இயக்குநர்கள்!

நடிகர் வடிவேலுவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து இயக்குநர் விஜய்மில்டன் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். 

சென்னை: நடிகர் வடிவேலுவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து இயக்குநர் விஜய்மில்டன் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். 

பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த காண்டிராக்டர் நேசமணி கதாபாத்திரம் சமீபத்தில் உலக அளவில் ட்ரெண்டானது. இதையடுத்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்த வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தைக் குறித்து இயக்குநர்கள் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் குறித்து ஒருமையில் பேசியிருந்தார். 

அவரின் அந்த பேச்சு திரைத்துறையினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் சமுத்திரக்கனி, நவீன் உள்பட ஒரு சில இயக்குநர்கள் வடிவேலுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இயக்குநர் விஜய்மில்டனும் தனது கண்டனத்தைத் தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது, ‘தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்துக் கூட சித்தம் கலங்கும் போல! உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி  அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.