மூன்று மதங்களுக்கும் ஒரே கோவில்! ராகவா லாரன்ஸின் புதிய திட்டம்!!

 

மூன்று மதங்களுக்கும் ஒரே கோவில்! ராகவா லாரன்ஸின் புதிய திட்டம்!!

ராகவேந்திரர் சுவாமியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ், இந்து, முஸ்லீம், கிறிஸ்வர்கள் ஆகிய மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டப்படும் என அறிவித்தார். 

ராகவேந்திரர் சுவாமியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ், இந்து, முஸ்லீம், கிறிஸ்வர்கள் ஆகிய மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டப்படும் என அறிவித்தார். 

சினிமா மட்டுமின்றி சமூக சேவைகளில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அரசு பள்ளிகளையும் தத்தெடுத்து, அதனை புதுப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் குழந்தைகளுக்கு இலவச கல்வியும் தனது அறக்கட்டளை மூலம் வழங்கிவருகிறார்.

லாரன்ஸ்

இந்நிலையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்வர்கள் ஆகிய மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்ட லாரன்ஸ் முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லாரன்ஸ், மதங்களாலும் சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் அதனால் தான் இந்த முயற்சியை மேகொள்ளவுள்ளதாகவும், புதிதாக கட்டப்படும் ஆலயத்தில் அனைவரும் சமமாக அமர்ந்து உணவருந்த அன்னதானகூடம் அமைக்கப்பட்டு தினமும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.