மூன்று தேசிய விருதுகள் பெற்ற ரீமேக் படத்தில் பிரஷாந்த் 

 

மூன்று தேசிய விருதுகள் பெற்ற ரீமேக் படத்தில் பிரஷாந்த் 

அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தேசிய விருதுகள் பெற்ற ரீமேக் படத்தில் பிரஷாந்த் 

சென்னை: அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பாலிவுட்டில் அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான படம் அந்தாதுன். இந்த படம் வசூலில் வெற்றிபெற்றது மட்டுமின்றி சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைகதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து. மூன்று விருதுகளைத் தட்டி சென்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பல போட்டிகள் நடைபெற்றன. முதலில் சித்தார்த் நடிக்கவுள்ளார் என்றும் பின்னர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடிக்கவுள்ளார். இதன் தமிழ் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார். இது குறித்து தியாகராஜன் கூறுகையில், ‘அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைதேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்குக் கைவந்த கலையாக இருக்கும்’ என்றார்.  

தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குநர், பிற நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவு செய்த பிறகு விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.