முகமூடிகள் அணியாத மாமனிதர்: அஜித்தை புகழ்ந்து தள்ளிய தந்தை நடிகர்!

 

முகமூடிகள் அணியாத மாமனிதர்: அஜித்தை புகழ்ந்து தள்ளிய தந்தை நடிகர்!

யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல், எந்த விதமான முகமூடிகளையும் அணியாத மனிதநேயர் அஜித் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல், எந்த விதமான முகமூடிகளையும் அணியாத மனிதநேயர் அஜித்’ என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

‘தல’ என தன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடிப்பில், ‘விஸ்வாசம்’ படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள், தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இதனால் அஜித் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.

rajkiran

இதன் தொடர்ச்சியாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,  ‘அரசியலில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடும் எண்ணமில்லை. எனது திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளேன். தனிப்பட்ட அரசியலில் எனக்கு இருக்கும் விருப்பு வெறுப்பை நான் யார் மீதும் திணிப்பதில்லை’ என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அஜித்தின் அறிக்கை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ‘யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல், எந்த விதமான முகமூடிகளையும் அணியாத மனிதநேயர் அஜித்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர் முன்னதாக அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தில் அவருக்குத் தந்தை கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.