மீண்டும் ரீலில் இணையும் ரியல் ஜோடி: ரசிகர்கள் உற்சாகம்!

 

மீண்டும் ரீலில் இணையும் ரியல் ஜோடி: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் மீண்டும்  இணைந்து  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்: நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் மீண்டும்  இணைந்து  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

samantha

பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் சவாலான கதாபாத்திரங்களையும் தேடி நடித்து வருகிறார் சமந்தா.திருமணமானால் சினிமாவிலிருந்து ஒதுங்கி கொள்ளும் நடிகைகள் மத்தியில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வழக்கம்போலவே தொடர்ந்து நடித்துவருகிறார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என சினிமா பாதையில் வேகம் குறையாமல் ஓடி கொண்டிருக்கிறார். 

samantha

திருமணத்துக்குப் பின் தனது கணவர் நாக சைதன்யாவுடன் முதன்முறையாக அவர் இணைந்த திரைப்படம்  மஜிலி.  இப்படம் சமீபத்தில் வெளியாகி வணிக ரீதியில் சுமார் 23 கோடியை வசூலித்து வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் சமந்தா  கணவர் நாக சைதன்யாவுடன் மீண்டும்  இணைந்து  ஒரு வெற்றி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதற்காக சில இயக்குநருக்களிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

samantha

நாக சைதன்யா, 2010ம் ஆண்டு வெளியான ‘ஏ மாயா சேஸாவே’ என்ற படத்தின் மூலம் சமந்தாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார். பின்னர், மனம், ஆடோநகர் சூர்யா, மஜிலி உள்ளிட்ட நான்கு  படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: பொறுமையை இழந்த ‘கூல் கேப்டன்’: அம்பயரிடம் கடும் வாக்குவாதம்; அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!