மீ டூ- வில் சிக்கிய சிம்பு: பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் சிம்புவின் மீது நடிகை லேகா வாஷிங்டன் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை: நடிகர் சிம்புவின் மீது நடிகை லேகா வாஷிங்டன் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியைத் தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். இந்திய சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் பல்வேறு நபர்கள் மீது #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதில் வைரமுத்து, அர்ஜுன், சுசி கணேஷ், தியாகராஜன் என பல்வேறு நபர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் பிரபலமாகி வரும் மீ டூ சர்ச்சை தற்போது சிம்புவின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி பாதியில் நின்ற படம் கெட்டவன். படத்தில் நடித்த நடிகை லேகா வாஷிங்டன் #MeToo மூலம் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒரு வார்த்தை: கெட்டவன்’ என மறைமுகமாக சிம்புவை குறிப்பிட்டுள்ளார்.
One word : Kettavan. #metoo
— lekha washington (@washingtonlekha) October 21, 2018
சர்ச்சைக்குப் பெயர்போன சிம்பு சில காலமாகப் படங்களில் நடப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அவர் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதாகவும் கூறப்பட்டது. இதனிடையே சிம்புவை பற்றி லேகாவின் இந்தக் குற்றச்சாட்டு அவரது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.