மல்யுத்தத்தில் சவால் விட்ட பிரபல நடிகையை தூக்கி வீசிய வீராங்கனை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

மல்யுத்தத்தில் சவால் விட்ட பிரபல நடிகையை தூக்கி வீசிய வீராங்கனை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

மல்யுத்த சவாலில் களத்தில் குதித்த நடிகை ராக்கி சாவந்தை வீராங்கனை ஒருவர் தூக்கி வீசியதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

சண்டிகர்: மல்யுத்த சவாலில் களத்தில் குதித்த நடிகை ராக்கி சாவந்தை வீராங்கனை ஒருவர் தூக்கி வீசியதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் சண்டிகரில் உள்ள தவ் தேவிலால் ஸ்டேடியத்தில் நடந்த மல்யுத்த போட்டியின் தொடக்க விழாவில் நடனம் ஆட சென்றிருந்தார்.  நடனம் ஆடி முடிந்ததும் பார்வையாளர்களுக்கான இடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது மகளிர் மல்யுத்த போட்டி. மல்யுத்த வீராங்கனை ரோபெல் என்பவர் மற்றொரு வீராங்கனையைத் தோற்கடித்தார். பின்னர், என்னுடன் மோதப் பெண்கள் யாராவது தயாராக இருக்கிறீர்களா? என்று  பார்வையாளர்களை நோக்கிக் கேட்டார்.

raki

உடனே ராக்கி, நான் இருக்கேன் என்று எழுந்து நான் உங்கள் சவாலை ஏற்கிறேன் என்று கூறினார். பின் இருவரும் மோத வீராங்கனை, ஒரே நொடியில் ராக்கியை தலைக்கீழாகத் தூக்கி தரையில் வீசி எறிந்தார். பேச்சு மூச்சின்றி படுத்து விட்டார் ராக்கி.

raki

இதையடுத்து பெண் போலீசாரும் உடன் இருந்த மல்யுத்த வீராங்கனைகளும் அவரைத் தூக்கி கைதாங்கலாக வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக ஸிராக்பூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.