பொய்யான முகமூடியை போட்டுக்காதிங்க… வாழ்க்கை தத்துவம் சொல்லும் வரலட்சுமி சரத்குமார்!

 

பொய்யான முகமூடியை போட்டுக்காதிங்க… வாழ்க்கை தத்துவம் சொல்லும் வரலட்சுமி  சரத்குமார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கையில் இருக்கும்  டாட்டூவின் ரகசியம் பற்றி பதிவிட்டுள்ளார்.

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கையில் இருக்கும்  டாட்டூவின் ரகசியம் பற்றி பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான இவர் கதாநாயகி கதாபாத்திரம் மட்டுமின்றி வில்லி கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். 

varalaxmi

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார், மாரி 2 படங்கள் வெற்றியானதையடுத்து தற்போது வெல்வெட் நகரம், கன்னி ராசி, நீயா 2 என்று அரை டஜன் படங்களைக் கையில் வைத்துள்ளார்.

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் தனது கையில் முகமூடியை டாட்டூவாக போட்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘சினிமா மீதான எனது காதலுக்கும், வாழ்க்கையில் போராடி வரும் எல்லா பெண்களுக்கும் ஆதரவாகத்தான் இந்த டாட்டூ. நாம் அனைவரும் முகமூடியை அணிந்துள்ளோம். நமது வாழ்க்கை மற்றவர்களுக்காகப் பொய்கள் நிறைந்ததாக இருக்கிறது. எந்த முகமூடியும் இல்லாமல் நமது வாழ்க்கையை வாழ்வோம். நம்மை நாமே நேசிக்க கற்றுக்கொள்வோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முன் அழகை காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்