பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆரம்பம்: ஐஸ்வர்யா ராய் பங்கேற்பு!?
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாகக் கருதப்படுவது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. புகழ்பெற்ற இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்றுவருகின்றனர். தற்போது பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
சோழ சாம்ராஜ்யத்தின் ஆட்சியை அழகாகவும் அதே சமயம் சில கற்பனை ஊற்றுகளை பொதிக்கும் வண்ணமும் அமைய பெற்றுள்ள இந்த நாவலில், 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருக்கும். அதில் முக்கியமாகக் குந்தவை, வந்தியத் தேவன், பழுவேட்டரையர், பூங்குழலி, ஆழ்வார்கடியான், நந்தினி உள்பட கதாபாத்திரங்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் , விக்ரம், அமிதா பச்சன் என பலரும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.
#PonniyinSelvan will be among d first movie shot in Madhya Pradesh where the Chola period will be replicated,It will be shot in Kerala,Chennai and also in d dense jungles of Thailand,d period film which is set in d 10th century and will be made in two parts, #AishwaryaRaiBachchan pic.twitter.com/ZSFQjJUKSR
— Aishwarya Rai (@my_aishwarya) October 11, 2019
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. மேலும் கேரளா, சென்னை மற்றும் தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.