பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த ‘மங்காத்தா’ நடிகர்!

 

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த ‘மங்காத்தா’ நடிகர்!

இந்த நாவலில், 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்  இடம் பெற்றிருக்கும்.  

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் நடிகர் அஸ்வின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

ponniyin selvan

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாகக் கருதப்படுவது  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. புகழ்பெற்ற இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்றுவருகின்றனர். தற்போது பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகப் படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். சோழ சாம்ராஜ்யத்தின் ஆட்சியை அழகாகவும் அதே சமயம் சில கற்பனை ஊற்றுகளை பொதிக்கும் வண்ணமும் அமைய பெற்றுள்ள இந்த நாவலில், 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்  இடம் பெற்றிருக்கும்.  

UP

அதில் முக்கியமாகக் குந்தவை,  வந்தியத் தேவன், பழுவேட்டரையர், பூங்குழலி, ஆழ்வார்கடியான்,  நந்தினி உள்பட கதாபாத்திரங்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் , விக்ரம், அமிதாப்  பச்சன் என பலரும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். 

 

இந்நிலையில் நடிகர் அஸ்வின் பொன்னியின் செல்வனில் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே  ‘மங்காத்தா’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்’, ‘பாலகுமாரா’, ‘ஜீரோ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   இதுகுறித்து நடிகர் அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில்,  கல்லூரி மாணவனாக ‘ஆயுத எழுத்து’ படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகள் செய்தேன். தற்போது ஸ்பெஷல் ரோலில் நடிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

ashwin

முன்னதாக  பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் தொடங்கியது. மேலும் கேரளா, சென்னை மற்றும் தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகக்  கூறப்படுகிறது.