பேட்ட 50: மருமகன்களுடன் கேக் வேட்டி கொண்டாடிய சூப்பர் ஸ்டார்!

 

பேட்ட 50: மருமகன்களுடன் கேக் வேட்டி கொண்டாடிய சூப்பர் ஸ்டார்!

பேட்ட படத்தின் 50 வது நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது இரு மருமகன்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

சென்னை: பேட்ட படத்தின் 50 வது நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது இரு மருமகன்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 10ம் தேதி வெளியான திரைப்படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கிளிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய்சேதுபதி,மேகா ஆகாஷ்,நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில் பேட்ட திரைப்படம் வெளியாகி 50நாள் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.  அதனை கொண்டாடும் விதமாக ரஜினி பேட்டை குழுவுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதில் முதல் முறையாகத் தனது இரு மருமகன்களான தனுஷ் மற்றும் விசாகன் கலந்துகொண்டர். 

petta

ரஜினி தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும், 50 வது நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.